ராமநாதபுரம், பிப்.26: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் பல கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி மக்களின் குறைகள், அடிப்படை பிரச்னைகளை கேட்டு வருகின்றனர். அதனடிப்படையில் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் ஊராட்சி சபை கூட்டம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.