கொடைக்கானல், பிப். 26: கொடைக்கானலில் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது.
கொடைக்கானலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை பிரசாரம் நேற்று நடந்தது. தாலுகா செயலாளர் செந்தாமரை தலைமை வகிக்க, குழு உறுப்பினர்கள் செல்லையா, சின்னு, ராணி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.