கொடைக்கானலில் வரி உயர்வை கண்டித்து பிரசாரம்

கொடைக்கானல், பிப். 26: கொடைக்கானலில் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது.

கொடைக்கானலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை பிரசாரம் நேற்று நடந்தது. தாலுகா செயலாளர் செந்தாமரை தலைமை வகிக்க, குழு உறுப்பினர்கள் செல்லையா, சின்னு, ராணி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல் நகராட்சியில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளின் உயர்வினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதை உடனே ரத்து செய்ய வேண்டும். உள்ளூர் வாகனங்களுக்கான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும், மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் மத்திய மாநில அரசின் செயல்பாடுகளை கண்டித்து பிரசாரம் நடந்தது.

Related Stories: