சத்தியமங்கலம், பிப்.22:சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள சுஜில்கரை கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மலைகிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திங்களூர் ஊராட்சி சுஜில்கரை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேல்நிலைத்தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.இந் நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் இதுவரை மின்மோட்டாரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.