குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் போக்சோவில் கைது

சத்தியமங்கலம், பிப்.22: சத்தியமங்கலம் பகுதியில் நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.சத்தியமங்கலத்தை  அடுத்துள்ள தாண்டாம்பாளையம் பாரதிநகரில் வீட்டில் தனியாக இருந்த 4 வயது  பெண் குழந்தையிடம் அதே ஊரை சேர்ந்த குப்புராஜ் மகன் ஜெகன் (19), மாணிக்கம்  மகன் ராக்கிமுத்து (22) ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.  இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் சத்தியமங்கலம் அனைத்து மகளிர்  காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் இந்திராணி  இருவரிடமும் விசாரணை நடத்தினார்.விசாரணையில், இருவரும் பாலியல்  பலாத்காரத்தில் ஈடுபட முயற்சித்ததாக ஒப்புக்கொண்டதை அடுத்து இருவர் மீதும்  போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Related Stories: