வாலிபர் மர்மச்சாவு வழக்கில் 5 பேர் கைது

பாபநாசம், பிப். 22:  பாபநாசம் அடுத்த சக்கராப்பள்ளி ஹவ்வா நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது (27). செல்போன் கடை வைத்துள்ளார். இவரது தம்பி பைசல் ரகுமான் (23). அண்ணனுக்கு உதவியாக செல்போன் கடையில் ேவலை பார்க்கிறார். இந்நிலையில் சாகுல் அமீதுக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலானது. இருவரும் கடந்த மாதம் 22ந் தேதி தலைமறைவாகினர்.

இந்த தகவல் கிடைத்ததும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் கணவர், சொந்த ஊருக்கு வந்து உறவினர்களும் சென்று சாகுல் அமீதின் தம்பி பைசல் ரகுமானை வீட்டுக்கு அழைத்து சென்று மிரட்டினர். பின்னர் வீட்டுக்கு வந்த பைசல் ரகுமான் திடீரென ரத்தவாந்தி எடுத்தார். இதையடுத்து அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, பைசல் ரகுமான் கடந்த 17ம் தேதி இறந்தார்.

இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி சக்கராப்பள்ளியை சேர்ந்த சாதிக் பாட்ஷா (52), அப்துல் சமது (26), அய்யம்பேட்டையை சேர்ந்த அப்துல் மஜித் (45), மேலவழுத்தூரை சேர்ந்த சையது மதானி (33), மாத்தூரை சேர்ந்த டேனி (40) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: