ஊத்துக்கோட்டை, பிப்.21: ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. அவரை யாராவது கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திரமாநிலம் சத்தியவேடு பகுதி கிருஷ்ணா கால்வாயில் ஆண் சடலம் தண்ணீரில் அடித்து வருவதாக நேற்று அப்பகுதி மக்கள் சத்தியவேடு காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அந்த சடலம் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை தாண்டி தொம்பரம்பேடு பகுதிக்கு வந்தது. அது அங்குள்ள உள்ள சிறு பாலத்தில் சிக்கிக்கொண்டது. இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.