வேலைவாய்ப்பு முகாம்

கீழக்கரை, பிப். 21: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலை வாய்ப்பு பிரிவு சார்பாக நாளை மறுநாள் பிப்.23ல் காலை 9.30 மணியளவில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் டிப்ளமோ 2015-2017ல் தேறிய மற்றும் தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு முகாமை சென்னை டி.வி.எஸ். சுந்தரம் ஆட்டோ காம்போனஸ் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையை சேர்ந்த மணி என்பவர் நடத்த உள்ளார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் அலாவுதீன் கூறுகையில், ‘எங்களது கல்லூரியில் பிப்.23ல் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் டிப்ளமோ 2015-2017ல் தேறிய மற்றும் தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நேர்முக தேர்விற்கு வரும் மாணவர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, விண்ணப்பம், கல்வி மற்றும் வயது சான்றிதழ் நகலுடன் வரவேண்டும். இதில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு மாத ஊதியம் ரூ.13 ஆயிரத்து 430 இவற்றுடன் இரண்டு வேலை உணவு வழங்கப்படும்’ என்றார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மற்றும் வேலை வாய்பு ஒருங்கிணைப்பாளர் சேக்தாவுது மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: