வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்புடைய அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மூலம் கண்காணிக்கப்படுகிறது. எனவே தேவையுள்ளவர்கள் அவரை அணுகி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மாநில அளவில் இந்த அலுவல் தொடர்பாக சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகம் (இணைப்பு) 4வது தளத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகத்தை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம். (044) 28515288 என்ற தொலைபேசியில் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.