அரசு டாக்டரை மிரட்டிய 2 பேர் கைது

திருவாடானை, பிப். 21: திருவாடானையில் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி மருத்துவராக சினேகா (30) பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பணியில் இருந்தபோது பண்ணைவயல் கிராமத்தை சேர்ந்த சதீஷ், வெட்டிவயல் கிராமத்தை சேர்ந்த நல்லையா (43), இதே ஊரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (25) ஆகிய மூவரும் அவர்களது உறவினரை பார்ப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

அப்போது குடி போதையில் இருந்த மூவரும் அரசு துணை மருத்துவரான சினேகாவை அசிங்கமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சினேகா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லையா மற்றும் சுரேஷ்குமார் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான சதீஷை தேடி வருகின்றனர்.

Related Stories: