அர.சக்கரபாணி எம்எல்ஏ குற்றச்சாட்டு டிப்பர் லாரிகளுக்கு நான்கு கட்டுப்பாடு

திண்டுக்கல், பிப். 21: திண்டுக்கல்லில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதன்படி டிப்பர் லாரிகள் அதிவேகமாக இயக்கக் கூடாது, அதிகம் பாரம் ஏற்றுவதை  தவிர்க்க வேண்டும். பாரத்தின் மீது முற்றிலும் தார்பாலின் கொண்டு மூட வேண்டும். டிப்பர் லாரி வாகனங்களில் முன்னும் பின்னும் பிரதிபலிக்கும் சிவப்பு நிறப்பட்டைகள் ஒட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த முடிவுகளுக்கு அனைத்து உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். சிவப்பு நிறப்பட்டைகள் பொருத்தப்பட்டு ஆர்டிஓ அலுவலகம் முன்பு வாகனங்களை சமர்ப்பித்து சான்று பெற்ற வாகனங்கள் மட்டுமே மண், கல், ஜல்லி போன்றவற்றை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கனிமவளத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: