கராத்தே பயிற்சி முகாமில் கலக்கல்

பட்டிவீரன்பட்டி, பிப். 21: சிங்காரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார அளவிலான இலவச கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது, பட்டிவீரன்பட்டி, சித்தரேவு, சிங்காரக்கோட்டை, போடிகாமன்வாடி அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். 3 மாதம் நடந்த இம்முகாமில் அண்ணலங்கே, அமுவேலவன், மனுநீதிசோழன் ஆகியோர் பயிற்சி வழங்கினர். இதில் முதல்கட்ட பயிற்சியான மஞ்சள்பட்டை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை தலைமையாசிரியை வளர்மதி வழங்கினார். மேலும் முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுபொருட்களை ஊர்மக்கள் வாங்கியும்கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

Related Stories: