மாநில யோகா போட்டி திருச்சி மாணவர்கள் பதக்கங்கள் குவிப்பு

திருச்சி, பிப்.20:  தமிழக யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில், 43வது மாநில யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி பழனியில் நடந்தது.

 திருச்சி அணி சார்பாக ராஜசேகர் தலைமையில், 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், செந்தமிழ் செல்வி, தரண்ராஜ், செல்வகுமரன், யுகசந்திரஹாசன், ஹரிபிரசன்னா உள்ளிட்ட 21 பேர் வெற்றி பெற்று, 5 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களை கைப்பற்றினர். 3வது பசிபிக் ஆசியா யோகா சாம்பியன்ஷிப் போட்டி மே மாதம் நடைபெறுவதற்கு தமிழ்நாடு அணிக்கு இப்போட்டியில் வெற்றி ெபறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருச்சி மாவட்ட பள்ளி விளையாட்டு மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் சேர்மன் விக்டர் குழந்தைராஜ், தலைவர் சோமு, பொதுச்செயலாளர் ராஜசேகர், துணை செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ராஜேஸ்வரி, முத்துசங்கரேஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: