பழங்குடியினர் மையத்தில் சிறப்பு கருத்தரங்கு

ஊட்டி,பிப்.20: ேதசிய  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மையம் சார்பில் ஊட்டியில் ஒரு நாள்  சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது.

மலைப்பகுதி   ேமம்பாட்டுத் திட்ட  பயிற்சி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ேதசிய  பழங்குடியினர் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய மண்டல தலைவர் வெங்கடேஷ்வரன்  வரவேற்றார்.நீலகிரி மாவட்ட தாட்கோ மேலாளர் தியாகராஜன், முன்னோடி வங்கி  மேலாளர் ராஜ்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகைவாசன், நாவா தலைவர் ஆலுவாஸ் ஆகியோர் முன்னிைல வகித்தனர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். கதர் வாரிய இயக்குநர் லட்சுமி நாராயணன், தேசிய  பட்டியல் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குநர்  பிரசாத் ஆகிேயார் பங்கேற்றனர்.

Related Stories: