பொன்னமராவதி, பிப்.20: பொன்னமராவதி ஒன்றிய பகல்நேர பாதுகாப்பு மாண வர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் பொன்னமராவதி வட்டார வள மையத்தில் பகல் நேர பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 20 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவர் களை ஊக்கப்படுத்தும் விதமாக பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராஜாசந்திரன், அவரது மனைவி கவிதா இருவரும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் வண்ணப் புத்தாடைகளை தங்களது சொந்த செலவில் வழங்கினர்.