தொண்டி, பிப். 20: தொண்டி பகுதியில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களும் சில நாள்களாக மூடி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தொண்டியில் ஸ்டேட் வங்கி உள்பட ஐந்து வங்கிகள் உள்ளது. இந்த வங்கிகளுக்கு தனியாக ஏடிஎம் உள்ளதால் இப்பகுதிமக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. கடந்த சில தினங்களாக அனைத்து வங்கியின் ஏடிஎம்களும் இணையதள பிரச்னை மற்றும் பணம் இல்லை என்பன உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டுள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. வங்கிகளுக்கு சென்று அதிக நேரம் செலவழித்து பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.