ராமநாதபுரம், பிப்.20: ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பொதுமக்கள் பொதுப்பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தனி நபர்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி ஆதிதிராவிட நலத்துறை அலுவலரிடம் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது, ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் பறையர் இனத்தை சார்ந்த 115 நபர்களுக்கு சக்கரக்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் 2 சென்ட் வீதம் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். மேலும் இப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் பொதுப் பயன்பாட்டிற்காக சமுதாயக்கூடம், ரேஷன்கடை குடிநீர் தேக்க தொட்டிகள் விளையட்டு மைதானம் அமைக்க கூடுதலாக ஒதுக்கப்பட்ட இடத்தை சிலர் ஆக்கிரமித்து கொள்ளும் முயற்சியில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தின் மூலம் பெற்றுக்கொண்டதாக கூறி வருகின்றனர்.