பழநி, பிப். 20: சின்னக்கலையம்புத்தூர் பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் ஆங்கில முதுகலை ஆஉயராய்வுத்துறையில் ங்கில இலக்கியங்களில் மொழி, கலாச்சார இணைவு குறித்த ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடந்தது. முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் செல்வி சந்தானகிருஷ்ணன் கருத்தரங்க நோக்கம் குறித்து பேசினார். இலங்கை ஜப்னா பல்கலைக்கழக பேராசிரியர் கந்தையா கணேசன் ஆங்கில மொழி வளர்ப்பில் நாடகத்தின் பங்கு எனும் தலைப்பில் பேசினார். கோவில்பட்டி கேஆர்.கலை அறிவியல் கல்லூரி ஆங்கில பேராசிரியர் பாலகிருஷ்ணன் இலக்கியத்தின் வழியில் கலச்சாரத்தை எடுத்து கூறுதல் எனும் தலைப்பில் பேசினார்.