திருத்தணி 7வது வார்டில் குடிநீர் வழங்காததை கண்டித்து மறியல்

திருத்தணி, பிப். 20: திருத்தணி நகராட்சி 7வது வார்டில் கீழ் பஜார் உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பருவ மழை பொய்த்ததால், நகராட்சிக்கு உட்பட்ட  ஆழ்த்துளை கிணறுகள் வற்றி போனது. இதன் காரணமாக நகராட்சியால் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால், தனியார் பம்ப் செட்டுகளில் இருந்து பெறப்பட்டு டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்கிறது நகராட்சி.இந்நிலையில், திருத்தணி நகராட்சி 7வது வார்டில் உள்ள கீழ் பஜார் பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பழைய பஜார்  சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: