மரக்கன்றுகள் நடும் விழா

கும்மிடிப்பூண்டி, பிப். 20: கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சரணி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சங்கர், பாஸ்கர், சரவணன், லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார கல்வி அலுவலர்கள்  முனிராஜசேகர், சேகர், புவராகமூர்த்தி, கணக்காளர் சரஸ்வதி, ஆசிரியர் கிரிஜா, வனவிலங்கு காப்பாளர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவர்கள் அதிகாரிகள் சேர்ந்து சுற்றுபுற பகுதியில் 300 மரக்கன்றுகளை  நட்டனர்.  

Related Stories: