தமிழக அரசின் உதவித் தொகை பெற வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்: பாதிரி கிராம மக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், பிப்.19: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பாதிரி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் தங்களையும் சேர்க்க வலியுறுத்தி கலெக்டர்  பொன்னையாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.மதுராந்தகம் வட்டம் பாதிரி கிராமத்தில் வசிக்கும் நாங்கள் அனைவரும் தினக்கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு ஒரு சென்ட் நிலம்கூட கிடையாது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த வறுமைக் கோட்டுக்குக்கு கீழ்  உள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் பட்டியலில், எங்களின் பெயரை சேர்க்கத் தவறிவிட்டனர். எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில், எங்களது பெயர்களையும்  இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: