காஞ்சிபுரம், பிப்.19: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து கிராமப்புற விவசாயிகளுக்கான அறிவியல், அறிவாற்றல் விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வேளாண் இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி கலந்து கொண்டு மண்வளம் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்து பேசினார்.காஞ்சிபுரம் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்ட வேளாண் துணை இயக்குனர் சாந்தி கலந்துகொண்டு பேசுகையில், நுண்ணீர் பாசனம் அமைத்த விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பம்ப் செட்டுகள், பைப் லைன்கள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் வழங்கப்படுவது பற்றி கூறினார்.
தெகூடதஇ பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் ஆயில் இன்ஜின், மண்வெட்டி, கடப்பாரை, பாண்டு ஆகிய கருவிகளை 80% மானியத்தில் வழங்கப்படும் என்றார்.