நாகர்கோவில், பிப்.15: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் ஐந்தாம் கட்ட சிறப்பு முகாம் இன்று (15ம் தேதி) குமரி மாவட்டத்தில் வடசேரி மேற்கு வருவாய் கிராமத்திற்கு மட்டும், வெட்டூர்ணிடம் சால்வோஷன் ஆர்மி மேல்நிலைப்பள்ளி, அனந்தபுரம் வருவாய் கிராமத்திற்கு அனந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கப்பியறை ‘ஆ’ வருவாய் கிராமத்திற்கு பாத்திரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி, இடைகோடு வருவாய் கிராமத்திற்கு கல்லுப்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.