ராமநாதபுரம், பிப்.14: பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையில் ஊர்ப்புற நூலகர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆயிரத்து 800 ஊர்ப்புற நூலக பணியிடம் உருவாக்கப்பட்டு கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி விதிகள் உருவாக்கப்படாததால், இதுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படாமல் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்திலேயே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணி வரன்முறை, பதவி உயர்வு உள்ளிட்ட எவ்வித பலன்களும கிடைப்பதில்லை. காலமுறை ஊதிய விகிதத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிடம் மனுக்கள் அளித்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் தற்போதைய சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என ஊர்ப்புற நூலகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.