மண்டபம், பிப்.14: ரூ.2.30 லட்சம் மோசடி புகாரில் கோர்ட் உத்தரவுபடி பெண் மீது, மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உச்சிப்புளி அருகே சூரன்காட்டு வலசையைச் சேர்ந்த சம்பத் மகள் பிரீத்தி. இவர் மண்டபம் மறவர் தெருவை சேர்ந்த பழனிவாசகம் என்பவரிடம் கடந்த 2016 ஜன. 20ம் தேதி ரூ.2.30 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நான்கு மாதத்திற்குள் பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாகவும் உறுதியளித்ததாக தெரிகிறது. கால அவகாசம் முடிந்தும் கொடுத்த பணத்தை பழனிவாசகம் பலமுறை கேட்டும் தராமல் பிரீத்தி ஏமாற்றிய கூறப்படுகிறது.