பாடாலூர், பிப்.14: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம், புதுவிராலிப்பட்டி கிராமத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகின்ற மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் வாக்காளர்கள் தான் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் விவி பேட் என்ற கருவியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவிகள் வாக்காளர் தாம் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என தெரிந்துகொள்ளும் வகையிலும் வாக்களித்த ஏழு வினாடிகளுக்குள் பதிவான வாக்கினை பார்த்து உறுதி செய்து கொள்ளும் வகையிலும் இந்தக் கருவியை இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.