மனம் திருந்திய 3 பேருக்கு மறுவாழ்வு

ராமநாதபுரம், பிப்.13: கீழக்கரை பகுதியில் கள்ளச்சாராய தொழில் செய்து மனம் திருந்தியவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று தொழில் செய்ய இலவசமாக ஆடுகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கள்ளச்சாரய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறையின் சார்பில் மறுவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கீழக்கரை சிங்காரத்தோப்பு பகுதியில் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு பின்னர் மனம் திருந்திய  செல்வராஜ், சுப்பிரமணியன், பால்ராசு ஆகியோருக்கு தலா 30 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆடுகளை டிஆர்ஓ முத்துமாரி வழங்கினார்.

Related Stories: