குடியாத்தம் அருகே மாயமான சிறுமி ஆந்திராவுக்கு கடத்தல்? தனிப்படை போலீசார் விரைவு

வேலூர், பிப்.13:  குடியாத்தம் அருகே மாயமான 15 வயது சிறுமி ஆந்திராவுக்கு கடத்தப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் சிறுமியை மீட்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. இவர் கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். நீண்ட நேராமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கடந்த டிசம்பர் 31ம் தேதி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். இருப்பினும் 50 நாட்களுக்கு மேலாகியும் சிறுமியின் நிலை குறித்து எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் காணாமல் போன சிறுமி, அவரது பெற்றோருக்கு செல்போனில் பேசி உள்ளார். அப்போது, தான் இருக்கும் இடம் தெரியவில்லை எனக்கூறி கதறி அழுதுள்ளார். சிறிது நேரத்தில் செல்போனை துண்டித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அந்த செல்போன் ஆந்திர மாநிலத்தில் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அதன்பேரில் தனிப்படை போலீசார் சிறுமியை மீட்க ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

Related Stories: