ஒட்டன்சத்திரம், பிப். 8: ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் சாலையில் கழிவுநீர் கால்வாய் அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளால் சாலை அகலம் குறைந்து விட்டது. இதனால் வாகனஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் சாலையில் மார்க்கெட்டிலிருந்து தாராபுரம் சாலை வரை கழிவுநீர் கால்வாய் செல்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இக்கால்வாயை அகலப்படுத்துவதற்காக நீண்ட குழிகள் தோண்டப்பட்டன. அதன்பின் மார்க்கெட் பைபாஸ் சாலை மிக குறுகியதாக மாறி விட்டது. தற்போது இப்பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருகின்றன. இதனால் தினந்தோறும் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது.