கோவை, பிப்.7: கோவை போத்தனூர் கஞ்சிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் சிவானந்தன்(52). தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்த போது, 2 வாலிபர்கள் உள்ளே புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை திருட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்து சிவானந்தன் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் திருடர்களை கையும், களவுமாக பிடித்தனர்.