ஈரோடு, பிப். 7: 100 அரசு பள்ளி நூலகங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் எஸ்.கே.எம் நிறுவனம் வழங்கியது.
எஸ்.கே.எம் நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்து. விழாவுக்கு எஸ்.கே.எம் குழுமங்களின் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி முன்னிலை வகித்தார். அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி வரவேற்று பேசினார். விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கலந்துகொண்டு புத்தகங்களை வழங்கினார்.