இடும்பாவனத்தில் சோலார் மின்விளக்கு இயங்குமா?

முத்துப்பேட்டை, பிப்.6: திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கடைதெருவில் சென்றாண்டு திமுக எம்எல்ஏ ஆடலரசன் தொகுதி மேன்பாடு நிதியில் சுமார் 3.50 லட்சம் செலவில் உயர மின் சோலார் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் கடைதெரு இரவில் வெளிச்சத்துடன் காணப்பட்டதுடன் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமின்றி நடமாடி வந்தனர். மேலும் இரவில் திருட்டு மற்றும் குற்றசம்பவம் தவிர்ககப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இப்பகுதியை தாக்கிய கஜா புயலுக்கு இந்த உயர மின் சோலார் கோபுர விளக்கு அடியோடு சாய்ந்தது. இதனால் இப்பகுதி இருண்டு காணப்பட்டது. இதனையடுத்து இந்த உயர கோபுர விளக்கை நிமிர்ததி சீரமைத்து தரவேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்களும் வியாபாரிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர; ஆனால் கண்டுக்கொள்வில்லைகாத்து வருகிறோம் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தும் சீரமைக்கவில்லை  கலெக்டர் கவனத்தில் கொண்டு இந்த உயர மின் சோலார் கோபுர விளக்கை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: