திருவாரூர் பிரபல நகைக்கடையில் கவரிங் கொடுத்து 6 பவுன் நகை மோசடி: கணவன், மனைவி கைது

மன்னார்குடி, மே 12: மன்னார்குடியில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் கவரிங் நகை கொடுத்து 6 பவுன் தங்க நகையை நூதன முறையில் மோசடி செய்த கணவன், மனைவியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலராஜவீதியில் குபேந்திரன் (45) என்பவருக்கு சொந்தமான பிரபல நகைக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி மதியம் கணவன், மனைவி போல் இரண்டு பேர், தங்களின் பழைய நகைக்கு பதில் 6 பவுன் புதிய தங்க செயின்களை பெற்றுக் கொண்டு கம்பி நீட்டினர். பின்னர், அவர்கள் கொடுத்த பழைய நகைகளை குபேந்திரன் பரிசோதனை செய்ததில் அவை கவரிங் என தெரி ந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மன்னார்குடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன், டவுன் எஸ்ஐ முருகன், குற்றப்பிரிவு போலீசார் சரவணன், பிரபாகரன், துரை, லிபியா உள்ளிட்டோர் அடங்கிய தனிப் படையினர் நகைக் கடை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படை யில் நூதன திருட் டில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர். இதுதொடர்பாக, சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (48), அவரின் மனைவி மங்கம்மாள் (40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

The post திருவாரூர் பிரபல நகைக்கடையில் கவரிங் கொடுத்து 6 பவுன் நகை மோசடி: கணவன், மனைவி கைது appeared first on Dinakaran.

Related Stories: