காஞ்சிபுரம், பிப்.2:காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், தொன்னாடு கிராமத்தில் கல்குவாரி அமைக்க ஒப்புதல் தெரிவித்து, கலெக்டர் பொன்னையாவிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது.மதுராந்தகம் அடுத்த தொன்னாடு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் கிராமத்தில் தனியார் நிறுவன கல்குவாரி அமைக்க இருப்பதை அறிந்தோம். இதையடுத்து, எங்கள் ஊர் ஏரிக்கு நீர் வரும் பாதையை அவர்கள் மறித்து விடுவார்கள் என்ற அச்சத்தால் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தோம்.