கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட மேலும் 4 மீனவர்கள் விடுவிப்பு

நாகர்கோவில், பிப். 1:  கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட மேலும் 4 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.குமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த ஆஸ்பெர்ட் சீபன் (41), குளச்சலை சேர்ந்த சுரேஷ் (43), ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த அந்தோணி பிச்சை (30), நாகப்பட்டினம், புதுப்பேட்டையை சேர்ந்த காத்தவராயன் (25) உள்பட 14 மீனவர்கள் ஈரானில் கடந்த 13ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக கத்தார் நாட்டு கடலோர காவல்படை அவர்களை கைது செய்தது.  அங்கு சிறை வைக்கப்பட்டிருந்ததில்  10 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு சொந்த ஊர் திரும்பினர். ஆஸ்பெர்ட் சீபன் உள்பட ஏனைய 4 மீனவர்களும் நேற்று முன்தினம் கத்தார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். நேற்று காலை சென்னை வந்த இவர்கள் அங்கிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாயிலாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர். குமரி மாவட்ட மீனவர்கள் இரவு நாகர்கோவில் வந்து சேர்ந்தனர் என்று தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தெரிவித்தார்.

Related Stories: