திருப்பத்தூர், ஜன.30: திருப்பத்தூர் அவ்வைநகர் பகுதியை சேர்ந்தவர் தேவகி(23). நாட்றம்பள்ளி அருகே உள்ள முனியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(28), கட்டிட தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் தேவகி கர்ப்பமாகி ஒரே மாதத்தில் கரு கலைந்ததாம். இதனால், அவர் மன வேதனையில் இருந்து வந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் அவ்வை நகரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் படுக்கை அறைக்கு சென்ற அவர், திடீரென மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டாராம்.