பவானி, ஜன.29: பவானி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களின் பாதுகாப்பு கருதி பவானி அருகே மயிலம்பாடி போத்தநாயக்கன்புதூரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவும் அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கடையே சுற்றி 15 அடி உயரத்திற்கு தடுப்பு அமைக்கப்பட்டு மது விற்பனை தொடர்ந்து நடந்தது. பார் உள்ள பகுதியில் கம்பி வேலி போடப்பட்டது.