பிரதமர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி

மதுரை, ஜன. 25:  பிரதமர் வருகையை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஐகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது. மக்கள் விடுதலை கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் தேவேந்திர குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசு தமிழகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது. கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரதமர் தமிழகம் வரவில்லை. ஆனால் தற்ேபாது எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவிற்காக ஜன.27ல் மதுரைக்கு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி போலீசில் மனு அளித்தோம். ஆனால், போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அமைதியான முறையில் தான் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. எனவே, எங்களது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்து உத்தரவிட்டார்.

Related Stories: