பொன்னேரி, ஜன. 25: மீஞ்சூரில் மின்வாரிய ஊழியரின் வீட்டை உடைத்து ₹50 ஆயிரம் பணம், 15 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 ஏடிஎம் கார்டுகளை மர்ம ஆசாமிகள் கொள்cளையடித்து சென்றனர். மீஞ்சூர் பாபு நகரை சேர்ந்தவர் சேகர் (50) மின்வாரிய ஊழியர். நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, சென்றிருந்தனர். நேற்று காலை வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.