மின்வாரிய ஊழியர் வீட்டில் 15 சவரன், 3 கிலோ வெள்ளி கொள்ளை

பொன்னேரி, ஜன. 25: மீஞ்சூரில் மின்வாரிய ஊழியரின் வீட்டை உடைத்து ₹50 ஆயிரம் பணம், 15 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 ஏடிஎம் கார்டுகளை மர்ம ஆசாமிகள் கொள்cளையடித்து சென்றனர். மீஞ்சூர் பாபு நகரை சேர்ந்தவர் சேகர் (50) மின்வாரிய ஊழியர். நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, சென்றிருந்தனர். நேற்று காலை வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில், இருந்த ₹50 ஆயிரம் பணம், 15 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 ஏடிஎம் கார்டுகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மீஞ்சூரில் அடிக்கடி கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories: