வேலூர், ஜன.25: அணைக்கட்டு அருகே டாஸ்மாக் கடையில் இருந்த பிரிட்ஜை திறந்தபோது அதிலிருந்த பீர்பாட்டில் வெடித்தது. இதில் சேல்ஸ்மேன் படுகாயமடைந்தார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த குருவராஜபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சேல்ஸ்மேனாக பாபு என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்தார். அப்போது ஒரு பீர் கேட்டதால் பிரிட்ஜை திறந்து பீர் பாட்டிலை எடுத்தார்.