தஞ்சையில் 28ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தஞ்சை, ஜன. 23:  தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. டிஆர்ஓ தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் காஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம், நுகர்வோர் வங்கி கணக்கில் அரசு மானியம் வரவு வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடு குறித்து நேரில் புகார் தெரிவிக்கலாம். குறைபாடு உள்ள நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காஸ் சிலிண்டர் விநியோகத்தை சீர்ப்படுத்தப்படவுள்ளது.

 எனவே தஞ்சை வட்டத்தில் காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை மனுக்கள் மூலம் நேரில் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: