கப்பலூரில் நாளை மின்தடை

மதுரை, ஜன.23: மதுரை அருகே உள்ள கப்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை (ஜன.24) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும் என திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் ரமணி தெரிவித்துள்ளார்.மின்தடை பகுதிகள்: கப்பலூர், கப்பலூர் பகுதி தியாகராசர் மில், உச்சப்பட்டி, தணக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம் மற்றும் கரடிக்கல்.

Related Stories: