தொண்டி, ஜன. 22: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திரியும் நாய்களுக்கு ஒருவித வினோத நோய் தாக்கியுள்ளது. ரோமங்கள் உதிர்ந்து காயங்களுடன் திரிகிறது. இதன் மூலம் ஏதும் நோய் பரவி விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் நாய்களை பிடித்து வெளியேற்ற வேண்டும் என்று பல்ேவறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியில் திரியும் நாய்கள் ஒருவித வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் ரோமம் உதிர ஆரம்பிக்கிறது. பிறகு உடல் முழுவதும் புண் ஏற்படுகிறது. நடக்க கூட முடியாமல் திரிகிறது. ரோமம் உதிர்ந்து பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் ஒருவிதமாக சப்தமிடுகிறது.