திண்டுக்கல், ஜன.22: மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூக நீதி கோட்பாட்டிற்கு எதிரான பொருளாதார அடிப்படையில் முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய மத்தியில் ஆளும் பாஜ அரசை கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன், தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கணேசன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் திருவாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். நிறைவாக திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நல்லமணி நன்றி கூறினார்.