செம்பட்டி, ஜன. 22: பொங்கல் விளையாட்டு விழாவில் டிரைவரை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
கொடைரோடு அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த கணேசன் மகன் பாலசுப்பிரமணி(23). டிரைவரான இவர் சம்பவதன்று பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடந்தது வந்தபோது, பாலசுப்பிரமணிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சரவணக்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றி மோதிக் கொண்டனர். இதில் பாலசுப்பிரமணி, சரவணக்குமார் விரலை கடித்ததில் காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.