பொன்னமராவதி,ஜன.22: பொன்னமராவதி அருகே அரசமலை வையாபுரி சுப்பிரமணியர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தைப்பூசம் அன்று மாலை தேரோட்டம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினசரி மண்டகப்படி நடைபெற்றது. இதன் பின்னர் நேற்று 21ம்தேதி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அங்கிருந்து சுவாமியை தேரில் வைத்து வழிபாடு செய்தனர்.இதன் பின்னர் கோயிலை சுற்றியுள்ள பொது மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று வழிபட்டனர்.