பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

சிதம்பரம், ஜன. 22: சிதம்பரம் ஜவ்ஹீத் பேரவை, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து சிதம்பரத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது. கருத்தரங்கத்திற்கு கிளைத்தலைவர் தாஜீதீன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஷேக்முகமது முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை பாரூக், அப்துல்நாசர், சேப்பாக்கம் அன்சாரி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7சதவீதமாக உயர்த்த வேண்டும், சிதம்பரம் நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து புதிய தார் சாலைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முகமது அம்மார் நன்றி கூறினார்.

Related Stories: