க.பரமத்தி, ஜன.22: பாலமலை பாலசுப்பிரமணி திருக்கோயிலில் தைபூச தோ ரோட்டம் நடை பெற்றது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சியில் பாலமலை பாலசுப்பிரமணி திருக் கோவில் உள்ளது. இங்கு தினசரி அபிஷேக பூஜைகள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் முருகனுக் கும், வள்ளி மற்றும் தெய்வாணை ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்று வருகிறது. கடந்த 16ந்தேதி தை மாத கிருத்திகை அன்று காலை முருகருக்கு சிறப்பு அபிஷேக ங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தைபூச தேரோட்ட விழாவை முன்னி ட்டு காலையில் பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டு கொடியேற்றதுடன் தை பூச விழா துவங்கியது. அதனை தொடர்ந்து தினசரி முருகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.இந்நிலையில் நேற்று காலையில் காவிரியில் இருந்து புனிதநீர் கொண்டு வரப் பட்டு முருகனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அலங்காரமாக வெள்ளியில் ராஜா அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்கள், பக்தர்கள் வழிபாடு செய்தனர். பல்வேறு இடங்களில் அன்ன தானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்வான தோரோட்டம் மாலை 4.30மணிக்கு கோவில் மழை அடிவாரத்தில் இருந்து புறப்பட்டது. மழையை சுற்றி வலம் வந்து மீண்டும் மழை அடி வாரத்தை வந்தவுடன் நிறைவுற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமி தரிசனம் செய்த அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.