தஞ்சை, ஜன. 18: தஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் வரும் 24ம் தேதி முதல் துவங்கி நடக்கிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான பொதுக்கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் முகாம்கள் நடக்கிறது. அதன்படி வரும் 24ம் தேதி திருவையாறு தாசில்தார் அலுவலகம், 31ம் தேதி பூதலூர் தாசில்தார் அலுவலகம், பிப்ரவரி 7ம் தேதி ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம், பிப்ரவரி 14ம் தேதி பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம், பிப்ரவரி 21ம் தேதி பேராவூரணி தாசில்தார் அலுவலகம், பிப்ரவரி 28ம் தேதி பாபநாசம் தாசில்தார் அலுவலகம், மார்ச் 7ம் தேதி கும்பகோணம் தாசில்தார் அலுவலகம், மார்ச் 14ம் தேதி திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகம், மார்ச் 21ம் தேதி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திலும் கடன் வழங்கும் முகாம் நடக்கிறது.