தொண்டி, ஜன. 18: தொண்டி அருகே சோலியக்குடியில் உள்ள மகான் செய்யது முகம்மது ஒலியுள்ளா தர்ஹா கந்தூரி விழா நேற்று நடைபெற்றது.
மகான் செய்யது முகம்மது ஒலியுள்ளா தர்ஹா 93வது கந்தூரி விழா சோலியக்குடியில் நடைபெற்றது. கடந்த காலங்களில் மனிதர்கள் மிகவும் உயரமாக இருந்ததாகவும் காலப்போக்கில் அவர்களின் உயரம் படிப்படியாக குறைந்து உள்ளதாகவும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த தர்ஹாவில் உள்ள கப்ருஸ்தான் (அடக்கஸ்தலம்) 40 அடி நீளம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் இங்கு மட்டுமே இவ்வளவு நீளமான சமாதி உள்ளது குறிப்பிடதக்கது.