துறையூர், ஜன.11: துறையூர் இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 65 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
துறையூரை அடுத்த கண்ணனூர் இமயம் பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாளாளர் ஆண்டி தலைமை வகித்தார். முதல்வர் ஸ்ரீதர் மாணவர்களுக்குவேலைவாய்ப்பு பற்றிய விபரங்களை எடுத்துக்கூறினார். துறைத் தலைவர் அசோக்குமார் வரவேற்றார். சென்னை டிவிஎஸ் குழும அதிகாரிகள், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான தேர்வுகளை நடத்தினர். இதில் 65 பேர்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு தாளாளர் ஆண்டி பணி ஆணைகளை வழங்கினார். ஆட்டோமொபைல் துறை தலைவர் பாலகுமார் நன்றி கூறினார்.